அண்ணே!
"உலவு.காம்" ன்னு ஒண்ணு இருந்துச்சே!
அது ரெண்டு நாளா எங்கே போச்சுன்னே தெர்யலியே!
அந்த urlஅடிச்சா.
Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.
Apache/2.2.14 (Unix) mod_ssl/2.2.14 OpenSSL/0.9.8e-fips-rhel5 mod_auth_passthrough/2.1 mod_bwlimited/1.4 FrontPage/5.0.2.2635 Server at ulavu.com Port 80
இப்படி வருதே.
என்ன பண்ணுறது?
Wednesday, March 31, 2010
உலவு எங்கே போச்சு
Posted by பொன்னம்பலம் at 5:21 PM 3 comments
Sunday, March 28, 2010
தமிழிஷ் வழி பதிவுலகம் கண்காணிக்கப்படுகிறது!!!
அத்திரி பாச்சா கொழுக்கட்டைன்னானாம்.
சின்னத் திரை உலகம் தமிழிஷ் வழியாக பதிவுலத்தைக் கண்காணிக்கிறார்கள்.
"அம்மன் படு(த்து)ம் பாடு" ன்னு ஒரு பதிவு போட்டோமா. அதை "தமிழிஷ்" வழியாப் படித்த நம்ம சன் டிவிக்காரர்கள் படிச்சு சுதாரிச்சுக்கிட்ட மாதிரி தெரியுதுங்க. ஆத்தா எந்திரிச்சுப் போயிடுவான்ன உடனே "மக்கள் விழித்திருகிறார்கள்" ங்குற பயம் வந்துருச்சோ என்னமோ?
நேற்றைய ஒலி பரப்பில் பிளாஷ் பாக் இல்லை. ஆனால் எழுத்து போடும்போது இருக்கும் அலங்கோல நடனம் இன்னுமும் இருக்குங்க. ஆரவல்லி, சிகண்டி சிரிப்புக்கூட 3 இடத்துலேதாங்க வருது. கதை கொஞ்சம் வேகமாக நகந்துருக்குது.
ஆக ஒண்ணு மட்டும் தெளிவாத் தெரியுது. பதிவுலக இடுகைகள் எல்லாத் தரப்பினராலும் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் கருத்துக்களுக்கு இன்னும் மதிப்பு இருக்குது.
Posted by பொன்னம்பலம் at 11:47 AM 0 comments
Friday, March 26, 2010
அம்மன் படு(த்து)ம் பாடு
நம்ம சன் டிவிலே சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30க்கு ஒலிபரப்பாகும் "அம்மன்" நாடகத்தைப் பத்தித்தானுங்க.
தொடக்கத்தில என்னமோ ஆன்மிகத் தொடர்போல காட்டினார்கள். வரவர ஒண்ணுமே சரியில்லை. நடுவுல "டீலா? நோடீலா?" வேற வந்துவிட்டதா? அது எப்ப முடியுதோ அப்பத் தான் அம்மன் வெளியே வரும். அதுவரை அம்மன் காத்துக்கிட்டே இருக்கணும்; அத்தோட பாத்துக்கிட்டு இருக்கிறவங்களும் காத்துக்கிட்டு இருக்கோணும். இதுதானுங்க கொடுமையோட ஆரம்பம்.
இப்பவெல்லாம் சாமி நாடகம்; பாப்போமின்னா. என்னத்தைச் சொல்ல. நாடகத்துக்கு முன்னாடி ஒரு நாட்டியம். இது என்ன வகை நாட்டியமோ? பேய் பிடித்ததைப் போல தலையில் ஒரு கையை வச்சுக்கிட்டு இன்னொரு கையை வேகமா ஆட்டிக்கிறது. இதுல காவியும் மஞ்சளும் உடை போட்டுக்கிட்டு தாம் தூம்முன்னு குதிக்கிறது.
முடிஞ்சதும் இதுவரைன்னு போட்டு இதுவரை வந்தவைகளில் (இயக்குனருக்கு)முக்கிய காட்சிகளை காட்டுறாங்க. ஒழிஞ்சு போன்னு விட்டுட்டா சும்மாவா இருக்குறாங்க. பழையபடி ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு; பாலாயியோட குச்சி சத்தமும் பாக்குறப்ப குடுக்குற சத்தமும். அத்தோட விளம்பரம் வந்துரும்.
5 நிமிடத்துக்கு அப்புறம் பரணியை காட்டுவாங்க. கும்பாபிசேகத்துக்கு பண்ணுற யாகம் வளக்குறதைக் காட்டுவாங்க. உடனே பிளாஷ்பாக். யானையிலே வர்ரதும், சண்டியை சூலாயிதத்தால குத்துறதும் அப்புறம் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ஆத்தா மஞ்சள் துணியாலே கண்ணைக்கட்டிக்கிட்டு உக்காந்திருக்கிறதும் தான். அப்புறம், ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு; அப்புறம் விளம்பரம்.
5 நிமிடத்துக்கு அப்புறம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவா வந்து தஸ்புஸ்ஸுன்னு 5 வாக்கியம் இங்கிலீஷுலே பேசுவாங்க. அப்புறம் கொலை, காணாமல் போனவனுடைய கதை, பரணியோட பேசினது எல்லாம் பிளாஷ்பாக். பழையபடி ஆரவல்லியோட சிரிப்பு; சிகண்டியோட சிரிப்பு.
அப்புறம்தான் கதை நகரும். 5 வாக்கியம் புதுசா பேசுவாங்க. அதுக்கு நடு நடுவுல பிளாஷ்பாக். என்ன கொடுமைடா ஐயா? இந்த5 வாக்கியத்துக்காக 30 நிமிடம் உக்கார வச்சு கண்ணைக் கெடுத்து, தூக்கத்தைக் கெடுத்து, நேரத்தையும் வீணடிக்கணுமா?
ஐயா, டிவி காரரே! ஆத்தா மஞ்சள் துணியாலே கண்ணைக்கட்டிக்கிட்டு உக்காந்திருக்காளேன்னு பாக்காதீங்க. அவ பொறுமை இழந்து எந்திரிச்சுப் போயிட்டா கதை கந்தலாயிரும். சாரதா தேவின்னு கதைவிட்டுக்கிட்டே இருக்கிறது எப்படி இருக்கு தெரியுமா?
பாம்பு பிடாரன் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போறேன்னு சொல்லிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கு.
ஆன்மிகத் தொடராச்சேன்னு பாக்குறவங்களை எல்லாம் வெறுப்பு ஏத்தி நாத்திகர்களாக மாத்தணும்ன்னு பாக்கிறாப்பலேல்ல இருக்கு. எங்க பொறுமையை சோதிக்காதீங்க. அம்மனை வச்சு காசு பண்றதுக்கும் ஒரு அளவு இருக்கு. அதுக்காக லட்சக் கணக்காணவர்களின் பொன்னான நேரத்தை கெடுக்காதீங்க. அவங்க பொறுமையையும் சோதிக்காதீங்க.
நான் புலம்பி என்னா ஆகப்போகுது. நீங்க திருந்த மாட்டீங்களே.
Posted by பொன்னம்பலம் at 11:41 AM 4 comments
Labels: அம்மன்