அத்திரி பாச்சா கொழுக்கட்டைன்னானாம்.
சின்னத் திரை உலகம் தமிழிஷ் வழியாக பதிவுலத்தைக் கண்காணிக்கிறார்கள்.
"அம்மன் படு(த்து)ம் பாடு" ன்னு ஒரு பதிவு போட்டோமா. அதை "தமிழிஷ்" வழியாப் படித்த நம்ம சன் டிவிக்காரர்கள் படிச்சு சுதாரிச்சுக்கிட்ட மாதிரி தெரியுதுங்க. ஆத்தா எந்திரிச்சுப் போயிடுவான்ன உடனே "மக்கள் விழித்திருகிறார்கள்" ங்குற பயம் வந்துருச்சோ என்னமோ?
நேற்றைய ஒலி பரப்பில் பிளாஷ் பாக் இல்லை. ஆனால் எழுத்து போடும்போது இருக்கும் அலங்கோல நடனம் இன்னுமும் இருக்குங்க. ஆரவல்லி, சிகண்டி சிரிப்புக்கூட 3 இடத்துலேதாங்க வருது. கதை கொஞ்சம் வேகமாக நகந்துருக்குது.
ஆக ஒண்ணு மட்டும் தெளிவாத் தெரியுது. பதிவுலக இடுகைகள் எல்லாத் தரப்பினராலும் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் கருத்துக்களுக்கு இன்னும் மதிப்பு இருக்குது.
Sunday, March 28, 2010
தமிழிஷ் வழி பதிவுலகம் கண்காணிக்கப்படுகிறது!!!
Posted by பொன்னம்பலம் at 11:47 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment