Saturday, December 31, 2005

10.புதுப் பாதை

வெட்டுண்ட கையும் வீழ்ந்துவிட்ட பூங்கொடியும்
கட்டுண்டு வணங்கும் கன்னியர்கள் பொன்னடியை
கூன்விழுந்த மானிடர்கள் குவிந்திருக்கும் சமுதாயம்
தான் விழுந்து வணங்கும் நாள் தலைமுறையில் வாராதோ?

பொழுது விடியதோ? புதுப்பாதை தோன்றாதோ?
அழுதழுது கன்னியர்கள் அலறும்நாள் மாறாதோ?
பழுதுபடா உத்தமனே பண்புமிகும் கண்ணியனே!
விழுதுவிட வைத்த மரம் விழுந்துவிடல் சம்மதமோ?

0 Comments: