6.பாழான மாய்கை சென்ற
****************************
6.பாழான மாய்கை சென்றொழிவ தெப்போ?
பரந்த மனம் செவ்வையாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே! ஐயோ!!
காழான உலகம் அதன் ஆசையெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவதும் ஏது? மூலம் பார்ப்பதெப்போ?
Tuesday, December 27, 2005
6.பாழான மாய்கை சென்ற
Posted by பொன்னம்பலம் at 12:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment